உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!


உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
பால் போல் உள்ள வெண்ணிலவு..
பார்த்தால் சிறு கறையிருக்கும்..
மலர் போல் உள்ள தாய்மண்ணில்..
மாறாத சில வலி இருக்கும்..
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..