Slumdog Millionaire - திரைப்படம்


Slumdog millionaire -Movie 
நன்றி:Google Video

அரங்கேற்றிய வகைகள் , , , | 10 கைதட்டல்(கள்)

சுனாமிப்பேரலை வடுக்களில் இருந்து மீண்டெழுவோம்


சினிமா சினிமா சினிமா அனுபவப்பகிர்வு

வணக்கம் வணக்கம் வணக்கம் பதிவெளுதி கன காலமாச்சு . . . இலங்கையிலிருந்து வெளிக்கிட்டதிலயிருந்து இன்று வரை முழுமையானதொரு பதிவினை எழுதவில்லை(அங்கையிருக்கேக்க ஏதோ எழுதிக்கிழிச்சதோ என்டு கேட்கிறது கேட்குது !!!) ஆனாலும் பின்னூட்டங்களையும் அங்கைஇங்கையென்டு போட்டுத்தாக்கிக்கொண்டு வந்ததோட சில பதிவுகளையும் போட்டிருக்கிறன் .

அண்மையில் தொடங்கின சினிமா தொடர்பான தொடர்பதிவில் அண்மையில் நட்சத்திரப்பதிவரான இலங்கையைச்சர்ந்த வந்தியத்தேவன் அவர்கள் சங்கிலித் தொடர் கேள்வி பதிலுக்கு பதிவெழுத அழைத்திருந்தார் அவருக்கு முதலில் நன்றிகள். இனி தொடருக்கு வாறன்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சினிமா பாக்கத்தொடங்கியது எந்தவயதென்றெல்லாம் சரியாகத்தரியாது. ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் பாண்டியராஜன் ஊர்வசி நடித்த "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் இருந்த பன்னிரண்டு திரையரங்குகளில் எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது அனேகமா வெலிங்ரன் திரையரங்கா இருக்கவேணும். அதில் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடிய "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலம். நாங்களும் படம் பார்த்த அடுத்த ஒரு கிழமை போற வாற இடமெல்லாம் பாடிக்கொண்டு திரிஞ்சம் :) . இது தவிர அளவெட்டியில் என் பாட்டா வீட்டில் தொலைக்காட்சி மூலம் தூரதர்சனில் ஒளிபரப்பான படங்களை பார்ப்பதுண்டு அதுவும் பனி காலமென்டால் தெளிவா வேலை செய்யமென்று கணிப்புமுண்டு அந்தக்காலகட்டத்தில் எங்களூரிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்குப்போனேர்கள் தங்கள் அந்தஸ்தைக்காட்ட பெரிய தொலைக்காட்சிப்பெட்டியெல்லாம் அனுப்பிவைப்பர் அனால் அவற்றை பாவிக்கத்தரியாமல் அவர்களது உறவினர்கள் அல்லாடிய தருணங்கள் எல்லாம் இப்போ நினைவுக்கு வருகிறது .இன்னுமொன்றையும் சொல்லவேணும். அந்த நாளில் வில்லன்கள் என்றால் கெட்டபெயர் இருக்கும் அவர் தோன்றும் காட்சிகளில் அவருக்கு பேச்செல்லாம் நடக்கும். உதாரணமாக நம்பியார் என்றவர் மிகவும் கெட்டவராக கணிக்கப்பட்டார்.சிறிது காலங்களுக்கு பின் என் மத்திய கிழக்கு சித்தப்பாக்கள் அனுப்பிய ஒளிநாடாக்கள் மூலம் சார்லி சப்லீன் (charli-chaplin) அவர்களைக் கண்டு கொண்டேன் அதன் பின் அவரது தீவிர விசிறியாகிவிட்டேன்

2.என்ன உணர்ந்தீர்கள்?
அந்த வயதில் உணர என்ன இருக்கு. தியேட்டரில் பெரிதாக படம் பார்க்க பயமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது .

3.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சூப்பர் ஸ்ராரின் குசேலன் ! இந்தப்படத்திற்காக செலவளித்தது கிட்டத்தட்ட இலங்கைக்காசில 15000/= க்கு மேல். ஆனால் ரஜினியும் வாசுவும் வைத்தார்கள் ஆப்பு. வெறுத்தே பொயிட்டுது. இதைப் பார்த்த பின் இனிமேல் எந்த தமிழ் சினிமாவையும் தியேட்டருக்கு போய் பார்க்கக்கூடாது என நண்பர்கள் நாம் முடிவெடுத்துக்கொண்டோம் எவ்வளவு நாள் தான் சபதம் நீடிக்குமோ தெரியல்ல.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தினம் தினம் TubeTamil, Aarampam, TamilO உபயத்தில் ஏதாவது ஒரு படம் முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோபார்ப்பதுண்டு அந்த வகையில் கடைசியாகப்பார்த்த திரைப்படம் சக்கரக்கட்டி. என்ன உணரக்கிடக்கு ? இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்களே எண்டு தான் ! ரகுமான் இசைஇருக்கு சிறந்த ஒளிப்பதிவிருக்கு ஏன் நடிக நடிகைகளும் பரவாயில்லை ஆனால் கதையை மட்டும் காணேல்ல !

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய சினிமா என்றால் இரண்டு வகையா பிரிக்கலாம் அழகிய தமிழ்மகன் மற்றும் குருவி ரகம் போன வருடம் தீபாவளியன்று டாக்டர் விஜயோட அழகிய தமிழ்மகன் திரைப்படத்தை ஏழு மணிநேரம் கால் கடுக்க கொழும்பு சினிசிட்டி திரையரங்குக்கு முன் நின்று பார்த்தது ! தாக்கினாங்க நம்மளை ! இது பற்றிய பதிவொன்று இங்கே ! அடுத்தது, குருவி அதைப்பற்றி என்னென்டு சொல்லுறது :(

மற்றயது திருவிளையாடல், இராமாயணம் போன்ற அந்தக்காலத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட திரைப்படங்கள் எப்படித்தான் எடுத்திருப்பார்களே தெரியாது கடுமையான உழைப்பு தெரியும்.

5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா திரைப்படம் தொர்பான சர்ச்சை

6.தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிறு வயதில் பத்திரிகையில் வரும் ஆக்கங்களை வாசிப்பதுண்டு குறிப்பாக வீரகேசரி வார இதழில் வரும் சினிமா பகுதியை நிச்சயம் வாசிப்பதுண்டு தற்பேது இணையத்தில் அதிக நேரம் வலம்வருவதால் அனேக சினிமா வலைப்பூக்களை வாசிப்பதுண்டு

7.தமிழ் சினிமா இசை?
முன்பு எம் எஸ் விஸ்வநாதனின் பாட்டுக்கள் பின் ரகுமான் தற்போதும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுடைய பல கிரமபோன் தட்டுக்கள் வீட்டிலிருக்கின்றன.

8.தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர ஆங்கில இந்தி படங்களை பார்ப்பதுண்டு. நான் சிறுவயது தொடக்கம் சார்லி - சப்லின் அவர்களது ரசிகன் அது தவிர யாழ்நகரில் திரையரங்கில் பார்த்த வேற்றுமொழிப்படம் (ஆங்கிலப்படம் தான் )Steven Spielberg இயக்கிய Jurassic Park, யாழ்ப்பாணத்தில் சிறீதர் திரையரங்கில் பார்த்தது. அதிகம் தாக்கியதென்றால் என்றSanjay Leela Bhansali. இயக்கிய Black என்ற இந்திப்படம். இப்படியெல்லாம் படமெடுக்கிறார்களே என்று வியந்ததுண்டு.

9.தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை இனிமேலும் இருக்காது ! தாயக சினிமாக்கு ஏதாவது செய்யவேண்டும் என அவாவுடன் இருக்கிறேன்

10.தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது பற்றி அலச எனக்கு அனுபவம் போதாதென நினைக்கிறேன்

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
வந்தி அண்ணா சொன்ன பதில் தான் !எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது.

ஆனாலும் எனக்கு எப்பொதும் இணையம் வேண்டும்

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் இனிய நண்பர்கள்.
1. இறக்குவானை நிர்ஷன்
3. கோசலன்
4. சயந்தன் அண்ணா
5. லோஷன் அண்ணா
6. தயாளன்

இறுதியாக இன்னொன்று
தாயகத்தில் பல கலைஞர்கள் இன்னும் இலைமறை காயாக மறைந்துள்ளார்கள் இவர்களை நல்லவகையில் வெளிக்கொணர்வது நமது கடமையல்லவா
எனக்குப்பிடித்த சில நம் அருகாமை நண்பர்கள்/கலைஞர்களின் படைப்புக்கள்


ஒலிம்பிக் - நேரடி ஒளிபரப்பு

08-08-08க்குத்தொடங்கியது ஒலிம்பிக் ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன.

அவற்றை நேரடியாகக்கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்

http://news.bbc.co.uk/sport1/hi/olympics/live_action/default.stm

ஆரம்பநாள் நிகழ்வை கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்
http://www.bbc.co.uk/programmes/b00cpf8p

அரங்கேற்றிய வகைகள் | 0 கைதட்டல்(கள்)

கலாச்சாரம்,பாரம்பரியம் அனைத்தையும் வெளிப்படுத்திய ஒலிம்பிக் போட்டி 2008 (கண்ணொளிக்காட்சிகள்)


08 வருடம்
08ஆம் மாதம்
08ஆம் நாள்
08 மணி
08 நிமிடம்
08 விநாடிக்கு துவங்கியது ஒலிம்பிக் ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன. சீனாவிலிருந்து அதிகபட்சமாக 639 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து 596 வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இதற்குமுன்பு இவ்வளவு பேர் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்றது இல்லை. இந்தியாவிலிருந்து 55, பாகிஸ்தானிலிருந்து 21, இலங்கையிலிருந்து 8 வீரர்களும் பங்கேற்கின்றனர்

தொடக்கவிழா தொடர்பான கண்ணொளிகள் சில


இது நான் பார்த்த ஒலிம்பிக் 2008


அரங்கேற்றிய வகைகள் | 1 கைதட்டல்(கள்)

குசேலன் - கண்ணொளிக்காட்சிகளுடன் விமர்சனம்



முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் ஆனால் இப்ப நாடு கடந்ததால கொஞ்சப்பேர்தான் (கிட்டத்தட்ட 10 பேர் ).நாடு மாறினாலும் Super Star படம் என்பதால காசைக்கூடப்பார்க்காமல் போனம் கிட்டத்தட்ட செலவாச்சு :( தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை என்டு சொல்லலாம் சரி சரி படத்துக்கு வருவம் . படத்தில நான் சொல்லுறதுக்கு பெரிசா ஒன்றுமில்லை அத்தோட இன்னோர் கலைஞனின் படைப்பை குறை சொல்வதில் விருப்பமுமில்லை அதிலும் மனதிற்கு பிடித்த பிடிக்காதவற்றை உங்களுடன் பகிர்கிறேன்

* நட்பின் பெருமையை கூறும் வகையில் வந்திருக்கும் இன்னொரு படம் குசேலன்.


* படத்தில் பசுபதி நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்

* பாடலொன்றில் இயக்குனர் முதல் தேனீர் கொடுப்பவா்கள் வரை காட்டியிருப்பது அழகு (Om Shanthi Om இலும் இறுதியில் காட்டுவார்கள் அது வேற கதை)

* சூப்பர் ஸ்டார் என்ற அற்புதமான என்ற அற்புதமான மனிதர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்

* வடிவேலுவின் காமெடி பயங்கரமோசம் .. நயன்தாராவின் அந்தரங்க அறைக்குள் வடிவேலு மறைந்திருந்து பார்ப்பதும், நயன்தாரா கண்ணாடி முன்பாக . . . . . . . . . . . . வாசு படம் மாதியே தெரியவில்லை

* சந்தானத்தின் மற்றும் லிவிங்ஸ்டன் மற்றும் சகபாடிகளின் ஓரிரு காமெடிகள் பரவாயில்லை. (சந்தான பாரதி ரெம்பப்பாவம்)

* கடைசியில் மைக் முன்பாக ரஜினி பேசும் ஐந்து நிமிட வசனமும், ரஜினியை புகழ்ந்து ஆசிரியர்கள் ஒவ்வொருவராக நீண்ட வசனம் பேசுவதும் விஜயகாந்த் படங்களை நினைவூட்டுகிறது

* அருமையான இசையை காட்சிகளால் வீணடித்துள்ளார்கள் உதாரணமாக சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடல் அதில் Graphics என்று அசிங்கப்படுத்தியுள்ளனர்

* மொத்தத்தில் நடிகளா பிரபு நிலமை ரெம்ப மோசம்ம்ம்ம்ம் :((

குசேலன் சும்மா எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி போனால் பார்க்கலாம்

அரங்கேற்றிய வகைகள் , | 6 கைதட்டல்(கள்)

இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் திரைப்படப்பாடல் வெளியீடு

இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் சிலரது சொந்த முயற்சியால் திரைப்படம் முயற்சியை இவ்வருட ஆரம்பத்தில் தெரடக்கியிருந்தனர் . அந்த வகையில் அதற்கான ஆரம்பக்கட்ட வெளிப்புறப்படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் பாடல்களை அண்மையில் வெளிடயிட்டிருந்தனர் ஆனால் துரதிஸ்டவசமாக அண்மையில் மொரட்டுவைப்பகுதியில் ஏற்ட்ட நிகழ்வுகளால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன (இந்தப்பாடலை இணையவெளியில் தரவேற்றியிருந்ததால் தப்பித்துவிட்டது ) இந்தப்பாடலை நான் படம் முழுமையாக தயாரிக்கப்பட்டு திரையிடும் போது பதிவிடலாம் என்றிருந்தேன் ஆனால் அது இயலாதகாரியமென்பதால் திரைப்படக்குழுவினரின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்

இலங்கைக்கலைஞன் ஒருவனின் படைப்பை பதிவுலகில் வெளிக்கொண்டுவருவதில் மகிழ்வடைகிறேன் ,
ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு நம்மை விட்டகன்றது ஈழத்து கலைஞர்களது துரதிஸ்டம். ...
தயவுசெய்து விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அவர்களது மனங்களைப்பாதிக்காதவாறு ஏனெனில் அடிமேல் அடிவாங்கிய இதயத்தால் தாங்க மாட்டார்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

பி.கு : இதுபற்றிய முழுமையான விபரங்களை "தாயகக்கலைஞர்கள்" வலைப்பூவில் தருகிறேன்

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!


உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
பால் போல் உள்ள வெண்ணிலவு..
பார்த்தால் சிறு கறையிருக்கும்..
மலர் போல் உள்ள தாய்மண்ணில்..
மாறாத சில வலி இருக்கும்..
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]

நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திரைப்பாடல்களக்கு Remix செய்வதுண்டு அந்த (வெட்டி)வேலையை தலைநகர் வந்தபின் நிறுத்தியிருந்தேன். ஆனால் ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அதுபோல் மீண்டும் திரைப்பாடல்களக்கு ரீமிக்ஸ் செய்துவருகிறேன் அவ்வாறு Remix செய்த பாடலொன்று தான். இது சூர்யாவும் அசினும் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . (சிங்களப்பாடல்களின் இடையே தமிழ்வரிகளை இணைப்பது சிங்களக்கலைஞர்களின் இப்போதைய Fashion )


சரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .

அரங்கேற்றிய வகைகள் | 3 கைதட்டல்(கள்)

நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . . . . [ இலங்கைக்கலைஞர்களின் இனிய கண்ணொளி ]

" நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . .
இந்த ஊரு அருமையெல்லாம் யார் உனக்கு சொல்லித்தருவார் ?
மண்வாசனை அருமையெல்லாம் உன்னை விட்டு விலகிப்போச்சா ?
உன்கூட எப்பவும் இருக்கும் இந்தஊரின் வாசனை தான் ! "
அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள் அவற்றை அவர்கள் பாணியில் கொடுத்துள்ளனர்


இலங்கையின் இளையதலைமுறை கலைஞர்களின் (சிங்கள,தமிழ்) கைவண்ணம் .
பாடகர்கள் பெயர் கஜன் மற்றும் டினேஸ்
இசை பாடல்வரிகள் காட்சிக்கலப்பு Graphics என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இவர்கள் ஆக்கி வெளியிட்ட இந்த பாடல் மூலமாக கணிசமானஅளவில் சிங்கள தமிழ் இரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டனர் .

" மாயாவின் அரங்கம் " திறப்பு விழா

அனைவரும் அன்புடன் வருக !

கடந்த 2007 மே மாதம் முதல் எழுத்துமூலமாக மட்டுமே உங்களை அடைந்து வந்த நான் இன்று முதல் வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உங்களை அடையவிருக்கிறேன் ஏலவே இல் சில கண்ணொளிகளைத்தரவேற்றியிருந்தாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கமைய கண்ணெளிகளுக்கென தனியானதொரு வலைப்பூவினை உருவாக்கி இன்று திறப்புவிழாவும் வைத்தாயிற்று !

இது உங்களாலேயே சாத்தியமாகியது

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும் கானா பிரபா அண்ணா றேடியோஸ்பதிமூலம் நேயர்விருப்பங்களைத்தருவது போல் இங்கும் நீங்கள் கேட்கும் வீடியோ பாடல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ஆகையால் உங்கள் விருப்பப்பாடலை மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டங்கள் மூலம தெரிவிக்கலாம் அவற்றை விரைவில் நாம் இவ்வரங்கில் திரையிடுவோம் ! அதேவேளை இங்கே வாராவாரம் " வலைப்பதிவர்களுக்காக எங்கள் தெரிவுகள் " பாடல் தெரிவுகளும் தரவேற்றப்படும் .

இதைஓர் கூட்டுப்பதிவாக்கும் எண்ணமுமிருக்கிறது

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

சரி சரி திறப்புவிழாவில்முதலில் மூத்தோர்களின் குரலில் சில உரைகள் . . .

* முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )





* இது விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு


அரங்கேற்றிய வகைகள் | 14 கைதட்டல்(கள்)